படித்ததில் பிடித்தது
நமது எண்ணங்கள் மிகவும் வலிமையானது அவற்றைப் பூக்களைப் போல் தூவினால் அது நமக்கு மாலையாகக் கிடைக்கும்
கற்களைப் போல எறிந்தால் நமக்கு காயங்களாகக் கிடைக்கும் நல்லது செய்யுங்கள் நல்லதே நடக்கும்
ஆசைக்கும் தேவைக்கும் உள்ள வித்தியாசத்தில் தான் நிம்மதி ஒளிந்திருக்கிறது சில நேரங்களில் நாம் எடுக்கும் தவறான முடிவுகள் நம்மை சரியான பாதையில் செல்ல கற்றுக்கொடுக்கின்றன
எப்போதும் பறந்தே திரியும் பறவைகளின் வேண்டுதல்கள் எல்லாம் இளைப்பாற ஒரு கிளை என்பதாகவும் இருக்கலாம் வாழ்க்கையில் வேகமாக முன்னேறவில்லை என்று வருத்தப்படாதீர் பின்வாங்காமல் செல்கிறீர் என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்
மற்றவர்களுக்கு நீங்கள் எவ்வளவு அதிக மதிப்பு கூட்டுகிறீர்களோ உங்கள் வாழக்கை அவ்வளவு அதிக சிறப்பாக இயங்கும்
Comments